'நிக்கி கல்ராணியை பார்த்த பிறகு தான் என் மனதை மாற்றிக்கொண்டேன்'... மனம் திறந்த ஜீவா!


                 சென்னை: நடிகை நிக்கி கல்ராணி தனது எண்ணத்தை மாற்றியதாக நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார். குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ஜீவா, நிக்கி கல்ராணி, அணைகா , ஆர்ஜே பாலாஜி , பத்ம சூர்யா , ராஜேந்திர பிரசாத் , சுகாசினி , மனோ பாலா , மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'கீ'. இப்படத்தை காலீஸ் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

                      கீ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஜீவா, நிக்கி கல்ராணியை பார்த்த பிறகு தான், வருடத்திற்கு ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற தனது முடிவை மாற்றிக்கொண்டதாகக் கூறினார்.

                மனதை மாற்றிய நிக்கி
                            இதுகுறித்து அவர் பேசியதாவது, "வருடத்திற்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நிக்கி கல்ராணியை பார்த்து தான் பல படங்கள் பண்ண வேண்டும் என எண்ணம் மனதில் தோன்றியது. நிக்கி கல்ராணியுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது..

             

No comments:

Post a Comment